இன்றும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி இன்று மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய காலை 9 மணி முதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.அதேநேரம் மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.