எதிர்வரும் 13-19ம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி!

எதிர்வரும் 13 முதல் 19 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 13 மற்றும் 15 முதல் 18 வரை 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.