மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது - புதிய அறிவிப்பு!

இந்த வார இறுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தியிருந்த நிலையில், இன்று ஒரு மணித்தியாலமாக  குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ளார்.

ஆகவே முன்னர் திட்டமிட்டவாறு நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் நீர்மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளன.

அதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் மூலமான மின்னுற்பத்தியில் தற்போதைக்கு உற்பத்தித்திறன் சற்று அதிகரித்துள்ளது.

அதன் காரணமாகவே இன்று ஒரு மணி நேர மின்வெட்டும் வார இறுதி நாளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.