புலமைப்பரிசில்,உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நடப்பு ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதன்படி, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆண்டு ஜனவரி 23ம் திகதி முதல் பெப்ரவரி 17ம் திகதி வரை நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2022ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.