பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் தமது சேவைக்கு உகந்ததல்லாத வகையில் செயற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர், பணியின் போது பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் வெளியான காணொளி குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த காணொளியில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் உறங்குவது தொடர்பான காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய, பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்யசகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த உத்தியோகத்தர்கள் மதுபோதையிலா? இருந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளின் பின்னர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாகவே, குறித்த காணொளியில் தோன்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.