இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர்,இராணுவ தளபதிக்கு அழைப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான காரணத்தை விளக்குமாறு கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.