ஹிருணிகா தொடர்பில் பகிரப்பட்ட புகைப்படங்கள்!! ரணில் வெளியிட்ட தகவல் - பதிலடி கொடுத்த ஹிருணிகா

சமூக ஊடகங்களில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நேற்றைய தினம் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது. எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அரசியல் விடயமாக ஹிருணிகா தனது இல்லத்திற்கு வந்ததாகவும் அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இது குறித்து ஹிருணிகா பிரேமச்சந்திரவும் தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், "நான் என் மார்பகங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்! நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

எப்படியும் நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பைப் பற்றிச் சிரித்து முடித்ததும், வரிசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு சாமானியன் இறந்திருப்பார்", எனக் குறிப்பிட்டார்.