வாகன இறக்குமதிக்கு அனுமதி : மனுஷ நாணயக்கார

இலங்கையில் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டு ஊழியர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.