கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்ய அனுமதி!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாளை(சனிக்கிழமை) சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.