51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.அதன்படி பயிற்சியில் இருக்கும் 51000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.அவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1ம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.