இராணுவத்தை விரட்டியடித்த மக்கள்! முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று (4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி அடியவர்கள் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்திற்கு தீர்த்தம் எடுப்பதற்கு செல்கின்ற தீர்த்தக்கரை செல்லும் வழியில் இராணுவத்தினர் வீதியை மறித்து பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை இராணுவ முகாம் வாயிலில் வீதிக்கு குறுக்காக தடையை ஏற்படுத்தி உள்ளே செல்ல விடாது தடுத்திருந்தனர்.

இதன்போது அங்கு சென்றவர்கள் பல்வேறு வகையிலும் அவர்களிடம் கோரிய போதும் அவர்கள் எந்த விதத்திலும் அனுமதிக்காத நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது