தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்- காலாவதியாகும் தடுப்பூசிகள்!

நாட்டில் ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் எதிர்வரும் 31 திகதியுடன் குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.