நபரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபாவை பெற்ற நபர்கள் : அதிரடியாக கைது


நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.

அதனடிப்படையில்

அக்குறணை பகுதியில் நபர் ஒருவரை கடத்திச்சென்று இருபது இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் நபர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

அண்மையில், குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 20 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த பணத்தை வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் குறித்த நபரே திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வர்த்தக நிலைய உரிமையாளர் உட்பட ஐந்து பேர் அவரை கடத்திச்சென்றமை குறிப்பிடத்தக்கது.