இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை நடுத்தர வயதுடையவர்களிடம் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து நாட்டில் நிலவும் பொருளாதார சமூக, பிரச்சினைகள் தான் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகளை வெளிப்படுத்தாது.மரணம் வரை கண்டறியப்படாமலும் இருக்கலாம். நிலைமை மோசமாகும் போது மிகவும் அரிதாக கடுமையான தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும் போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு போன்ற நிலைகள் கூட ஏற்படலாம்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் இதற்கு உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணம்” என பேராசிரியர் உதய ரலபனாவ சுட்டிகாட்டியுள்ளார்.