யாழில் வீதியில் அநாவசியமாக கூடியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்தனர்.குறித்த நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றுள்ளது.யாழ்ப்பாண பொலிஸாரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வீதியில் தேவையற்று நடமாடியோர் அநாவசியமாக வீதிகளில் நின்றோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.