புத்தாண்டு பரிசாக பால்மா விலை உயர்வு-சஜித் பிரேமதாச

புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நத்தாருக்கு முன் எரிபொருளின் விலையை அதிகரித்து நத்தார் பரிசுகளை வழங்கிய அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நவீனத்துவ, மனிதாபிமான புதிய அரசியல் இயக்கம் என்றும் திறமையான இளைஞர்களைக் கொண்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என நம்புபுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.