பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

கிளிநொச்சி பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.எனினும் பொலிஸ் நிலைய சேவைகள் தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த 23ம் திகதி விடுமுறைக்கு சென்று திரும்பியிருந்த நிலையில் இன்று தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.