வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றியைத் தனதாக்கியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று(23) இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணி மற்றும் பாகிஸ்தான் ஏ அணி ஆகியன மோதின.
இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 353 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 128 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
போட்டியில் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பாகிஸ்தான் ஏ அணியின் தய்யாப் தாஹிர் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.