நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.மழை பெய்யும் போது ஏற்படும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்களுக்கு அறிவித்துள்ளது.