எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், தீங்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கும் ஒன்றிணைந்த எதிரணியின் அவசியத்தை இந்த சந்திப்பின் போது சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவதே இக் கலந்துரையடலின் முக்கிய நோக்கமா
இதன்போது பாராளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள எதிர்க்கட்சி
இந்த ஆலோசனை கூட்டத்தில் கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், பி.சத்தியலிங்கம், ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.