புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு


ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் சேவையை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.