அழகு நிலையத்தில் ஒருவர் சுட்டுக்கொலை-பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது!

கம்பஹா பிரதேசத்தில் அழகு நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 39 வயதுக்கு இடைப்பட்ட பெத்தியகொட, மகேவிட்ட மற்றும் கொட்டுகுடா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலைக்கு பயன்படுத்திய ரிவால்வர் மற்றும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.