கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு - மட்டக்குளிய, ரண்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

'பட ரஞ்சி' அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த நபர் போதைப்பொருள் விற்பனையாளரான 'புகுதுகண்ணா' என்பவரின் நிதி நிர்வாகியாக பணியாற்றியவர் என காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

''நேற்றிரவு 8.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அவரது மார்பு மற்றும் இடது கையில் துப்பாக்கி குண்டுகள் காணப்பட்டன.

மேலும், சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.