பிலியந்தலையில் கொடூர விபத்து-ஒருவர் பலி!

பிலியந்தலை பொகுந்தர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய திருமணமாகாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ஜீப் வண்டியுடன் மோதியதில் அருகில் இருந்த வாய்கால் ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.விபத்தின் போது ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வீதியோரத்தில் பயணித்த குறித்த நபரின் மீது ஜீப் மோதியதுடன் அருகில் உள்ள கடை ஒன்றின் மீது மோதி மீண்டும் வீதியில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்துடன் பிலியந்தலை - கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.