மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கண்டி போகம்பர பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது .குறித்த தொழிலாளியை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.