திருகோணமலை கண்டி பிரதான வீதியில் விபத்து- ஒருவர் பலி!

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் பாலத்திற்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற பார ஊர்தி ஒன்றும் மாத்தளையில் இருந்து மணல் ஏற்றியவாறு மறு திசையிலிருந்து வந்த டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.