சவுதி அரேபிய தாதி வெற்றிடங்களுக்கு இலங்கையில் இருந்து தாதிகள் தெரிவு

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.

திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஈடுப்பட்டுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தில் தாதியர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களை இவர் கண்காணித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நேர்முகத் தேர்வில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான தாதியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், அடுத்த கட்டமாக தாதியர் டிப்ளோமா பெற்ற தாதியர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இத்துடன் சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் உள்ள ஆயிரம் தாதியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.