இலங்கையில் 100ஐ அண்மிக்கும் ஒமிக்ரோன் நோயாளர்களின் எண்ணிக்கை

 இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் என சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றபோதும், ஒமிக்ரோன் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரோன் திரிபானது மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதால், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் முறையாகச் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால், இது பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.