மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதன்படி, குறித்த 2 நாட்களில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், குறித்த நாட்களில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.