மூன்று நாட்களுக்கு மின் வெட்டு இல்லை


எதிர்வரும் ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதியிலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போது தெரிவித்துள்ளார்.


மின்சார உற்பத்திக்கு அவசியமான போதிய எரிபொருள் காணப்படுவதாலும், நீண்ட விடுமுறையில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவு என்பதாலும், குறித்த தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்த வாய்ப்பு இல்லை என, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.