தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் இரவு நேர ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது.மேலும் அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் ஜனவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.