ஆந்திராவில் 14ம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு!

ஆந்திராவில் எதிர்வரும் 14ம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.அதேநேரம் மும்பை நகரில் கொரோனா பாதிப்புகள் குறைவடைந்து வருவதை அடுத்து இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.