அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டுசெல்வதற்காக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் புதிய சிலரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.