சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை!

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் முடிவடைந்து சாதகமான முடிவு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த கடன் உதவிப் பொதியின் மூலம், இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர் நிதி வசதியை செயற்படுத்துவதற்கும், 1.5 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெறுவதற்கும் சீனா எதிர்பார்த்துள்ளது.சீனா இலங்கைக்கு கடன் வழங்கும் முக்கிய நாடாக கருதப்படுகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.