பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் – தயாசிறி

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நிலவும் உர நெருக்கடிக்கு அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

அறுவடை காலத்துக்குள் உரம் தொடர்பான புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.