நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு-மீண்டும் நீண்ட வரிசை அபாயம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.