தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம்!

எரிசக்தி அமைச்சினால் இந்த தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் குறித்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள், வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும் என கூறியுள்ளார்.வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.