மாயமான இளைஞன் சடலமாக - யாழில் பரபரப்பு

வாதரவத்தை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புத்துார் - வாதரவத்தை பகுதி இளைஞரே சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்ற போதே இன்று காலை நீரில் மூழ்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அச்சுவேலி வாதரவத்தை - பரிய பொக்கணை பகுதியை சேர்ந்த செ.ராகுலன் வயது 25 என்ற இளைஞன் நேற்றைய தினம் மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்தார். ஆனால் இன்று காலை ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இளைஞனின் தந்தை அவரைத் தேடிச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி அவர் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அச்சுவேலி காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சடலத்தை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர், வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என  தொியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறைியனர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.