கந்தர பொலிஸ்நிலைய கெப் வாகனத்தின் மீது மர்ம நபர் கல்வீச்சு!

காலி - கந்தர பொலிஸ்நிலையத்திற்கு சொந்தமான கெப் வாகனம், நேற்றிரவு தெவுந்தர பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தர பொலிஸ்நிலைய அதிகாரிகள் இருவர் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​நபர் ஒருவர் எறிந்த கல்லினால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

சம்பவத்தின் போது அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முன்னர் உந்துருளியொன்று இருவர் வீதியில் சத்தமிட்டவாறு பயணித்துள்ளனர். அவர்களில் உந்துருளியில் பின்னால் இருந்த நபரே வாகனத்தின் மீது கல்லெறிந்ததாகவும், பின்னர் குறித்த உந்துருளி தெவிநுவர மணிக்கூட்டு கோபுர வீதியால் வேகமாக பயணித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.