கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி : விசாரணைகள் தீவிரம்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் மர்மான முறையில் விட்டுச் செல்லப்பட்ட பொதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீர்வை வரியில்லா வணிக வளாகத்தின் முதல் தளத்தில் கைவிடப்பட்ட நிலையில் 55 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதியை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்னர்.

673 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோகிராம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏலக்காய் போன்றன இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதியை கொண்ட வந்த பயணி மற்றும் வருகை தந்த விமானம் குறித்து சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கமைய, விமான நிலைய தீர்வை வரியில்லா வணிக வளாகத்தில் உள்ள வியாபார நிலையங்களின் ஊழியர்களிடம் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.