பூமிக்கு கீழே கேட்கும் மர்ம சத்தம்: அச்சத்தில் நுவரெலியா மக்கள்!

கொத்மலை வேத்தலாவ பகுதியில் பூமிக்கு கீழே அசாதாரணமான சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் இரவில் பூமிக்குள் இருந்து பல்வேறு ஒலிகளை கேட்பதாக அறிவித்ததனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நந்தன கலபொட மேலும் தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும்  நுவரெலியா கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளை நியமித்து இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.