7வது நாளாகவும் தொடரும் மைனாகோகம!

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது.இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகைதரும் மக்கள், ஆர்ப்பாட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தவண்ணமுள்ளனர்.மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள், என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடதக்கது .