யாழில் கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல் - 34 வயது இளைஞன் படுகாயம்


மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) இரவும் இடம்பெற்றயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது.

இந்நிலையில், அவர் வீட்டுக்கு வெளியே வந்து வீதியில் நின்ற வேளை முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளிகளில் வந்த வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.