பிரபல தமிழ் வர்த்தகர் கொலை - மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் ஊடகவியலாளர்


ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம நாளையதினம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் சமரவிக்ரமவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரியவருகிறது.

பிரபல தொழிலதிபரும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளருமான தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் முன்னதாக ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட பின்னர், சமுதிதாவிடம் இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொரள்ளை மயானத்திற்குள் தினேஷ் ஷாப்டர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.