காலை வாரியது இந்தியா! மோசமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு

இலங்கைக்கு கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளரை மேற்கோள்காட்டி இத்தகவல்கள் வெளிக்கிளம்பியுள்ளன.

கடன் உடன்படிக்கைகள் தீர்ந்துவிட்டதால், இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள டொலர்கள் இல்லாத நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக கடந்த சில மாதங்களில் இந்தியா ஏற்கனவே 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த நிலையில்,எரிபொருள் கொள்வனவுக்கான 500 மில்லியன் டொலர் கடன் எல்லை வசதி இந்தியாவிடம் இருந்து புதிய அனுமதியை இலங்கை எதிர்பார்க்கிறது.

எனினும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

ஐஓசியிடமிருந்து கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 450,000 டன் பெட்ரோல் மற்றும் டீசலை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறு தக்க தருணத்தில் பல உதவிகளை வழங்கிய இந்தியா, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளமை இலங்கைக்கு பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் என துறைசார் அவதானிகள் கூறுகின்றனர்.