தென்னிலங்கையில் காணாமல் போயுள்ள சிறுமி! தேடுதலை முடுக்கிவிட்டுள்ள பொலிஸார்!

தென்னிலங்கை- பண்டாரகமவில் நேற்று வெள்ளிக்கிழமை, முற்பகல் 10 மணி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நாடளாவிய ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி அட்டாலுகம பிரதேசத்தில் வசிப்பவர்., அவர் உள்ளூர் பாடசாலையொன்றில் தரம் 4 இல் கல்வி பயின்று வருகிறார்.

அவர் முற்பகல் 10 மணியளவில் உணவு வாங்குவதற்காக அருகில் உள்ள வியாபாரத்தளத்துக்கு சென்றதாகவும், எனினும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் அயலில் தேடிய பின்னர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, குறித்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.