கோட்டாவிற்காக பதவியை துறக்க தயார்-நாடாளுமன்ற உறுப்பினர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குகாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயார் என பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர விரும்பினால் தான் அத்தகைய முடிவுக்கு வரத்தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு யாரோ இதுவரையில் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்