நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை சம்பவம்- சந்தேகநபர் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் நிட்டம்புவ பகுதியில் வைத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.24 வயதான குறித்த சந்தேகநபர் போலகந்தகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.கடந்த மே மாதம் 9ம் திகதி  நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரையில் 31 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.