கூரிய ஆயுத முனையில் பாரிய கொள்ளை: காவல்துறை விசாரணைகள் தீவிரம்

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவமானது, அடகு வைக்கும் நிலையத்தில் நேற்று(10) கூரிய ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, சந்தேக நபர்கள் சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு, இக் கொள்ளை சம்பவம் அடகு வைக்கும் நிலையித்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமாராக்களில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.