15ம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்!

எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.முற்பணம் செலுத்தும் போது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆகையால் விநியோக நடவடிக்கைகள் சிக்கலடையும் நிலைமை காணப்படுவதாக பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது .